குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என பேரிடர் மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலரும், விசாரணை அதிகாரியுமான அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்ற அதுல்ய மிஸ்ரா, குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தத் தீ விபத்து குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. குரங்கணி, குடகுமலை பகுதிகளில் மார்ச் 22-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளில் வாழும் குடும்பங்கள், பொதுமக்கள் என 72 பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் மேற்கொள்ளப்படும் மலை ஏற்றம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து இந்த ஆணையம் ஆய்வு செய்யும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
ஜூன் 18-இல் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு முகாம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



