விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

"பர்தா' அணிந்து வரும் திருடர்கள்: போலீஸ் எச்சரிக்கை

மதுரையில் திருநகர் பகுதியில் பர்தா அணிந்த ஆண் நபர்கள் திருடும் நோக்கத்துடன் சுற்றித் திரிவதாக போலீஸார் தெரிவித்தனர். 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 9:46 am IST

மதுரையில் திருநகர் பகுதியில் பர்தா அணிந்த ஆண் நபர்கள் திருடும் நோக்கத்துடன் சுற்றித் திரிவதாக போலீஸார் தெரிவித்தனர். 

இது குறித்து திருநகர் போலீஸார் தெரிவித்தது: திருநகர் மற்றும் விஸ்தரிப்பு பகுதிகளான அமைதிச்சோலை நகர், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பர்தா அணிந்த ஆண் ஒருவரும் மற்றொருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு வீடாகச் சென்று நன்கொடை கேட்டுள்ளனர்.

மேலும் ஆள் இல்லாத வீடுகளையும் அவர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரையும் விசாரிக்க முற்படும்போது இருவரும் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். 

எனவே வீட்டில் தனியாக இருப்பவர்கள் இது போன்ற நபர்கள் வரும்போது விசாரித்துவிட்டு கதவை திறக்கவேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் வரும் பட்சத்தில் உடனடியாக திருநகர் காவல் நிலையத்திற்கு 0452 2487783 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.