தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெற்று வந்தாலும் பெரிய அளவில் பேருந்து சேவை பாதிக்கப்படவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது. முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று வந்தாலும் பேருந்து சேவையில் பெரிய அளவில் பாதிப்பில்லை எனக் கூறப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 % அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விருதுநகரில் 85 % பேருந்துகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 % பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








