முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தூத்துக்குடி சிப்காட் திட்ட அலுவலருக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய இசைவாணை (ஒப்புதல்) இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் கூறி தூத்துக்குடி சிப்காட்-2 திட்ட அலுவலருக்கு விளக்கம் கேட்டு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 7:45 am IST

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய இசைவாணை (ஒப்புதல்) இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் கூறி தூத்துக்குடி சிப்காட்-2 திட்ட அலுவலருக்கு விளக்கம் கேட்டு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் த. கண்ணன் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்கா-கட்டம் 2 திட்ட அலுவலருக்கு அனுப்பிய கடிதம் விவரம்:
1988ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 1974 ஆம் ஆண்டு நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் இந்த விளக்கம் கேட்கப்படுகிறது. தங்களது நிறுவனமான சிப்காட் தொழிற் பூங்கா-கட்டம் 2, சிப்காட் தொழிற்சாலை வளாகம், தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய இசைவாணை (ஒப்புதல்) இன்றி செயல்பட்டு வருகிறது.

மேற்படி சட்டத்தின் 25 ஆம் பிரிவின் வரைமுறைகளை மீறியுள்ளீர்கள். அந்தச் செய்கையானது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றம் 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாகும் கால அளவுக்கு சிறைத் தண்டனையும் மற்றும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படத் தக்கதாகும்.

எனவே, தண்டிக்கப்படத்தக்க குற்றங்களுக்காக நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஏன் உங்கள் நிறுவனம் மீது குற்றவியல் வழக்குத் தொடரக்கூடாது என்பதற்கும், உங்கள் நிறுவனத்தை மூடுவதற்கும், மின்சாரம் வழங்குதல் மற்றும் நீர் வழங்குதலை நிறுத்தவும் ஏன் ஆணை பிறப்பிக்கக் கூடாது என்பதற்கும் இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாள்களுக்குள் காரணம் காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள் பதில் எதுவும் பெறப்படாவிட்டால், தங்கள் தரப்பில் திருப்தி அளிக்கும் விளக்கம் ஏதுமில்லை எனக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற கடிதம் சென்னையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா மேலாண்மை இயக்குநர் அலுவலகத்துக்கும், வேதாந்தா நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. திருநெல்வேலி சங்கர்நகரைச் சேர்ந்த எஸ்.பி. முத்துராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.