உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், காவிரி மேல்முறையீட்டு வழக்கில் இறுதித் தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரியும், தீர்ப்பில் தெரிவித்த "ஸ்கீம்' (செயல்திட்டம்) என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரியும் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், புதுச்சேரி அரசு கொறடா ஆர்.கே.ஆர். அனந்தராமன் சார்பில் மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவும், காவிரி இறுதித் தீர்ப்பை தாமதமின்றி அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி புதுச்சேரி அரசு சார்பிலான இடைக்கால மனுவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டன.