காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த பாடுபட்டு வருவதாக மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கோடைகால வறட்சியை சமாளிக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நாடாளுமன்றத்தை 23 நாள்கள் செயல்பட விடாமல் போராட்டம் நடத்தினோம். காவிரி விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்து விட்டால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது யார்?. நாடாளுமன்றத்தில் இவ்வளவு அழுத்தம் கொடுத்தும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, அதிமுக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்தால் எப்படி கண்டுகொள்ளும்.
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த பாடுபட்டு வருகிறோம். மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை ஜனநாயக முறையில் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் வெற்றி பெறுவோம் என்றார் மு.தம்பிதுரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



