சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த போது அங்கே அமைச்சர்கள் இருந்தார்கள் என்று நான் கூறியதாக வெளியான தகவல்கள் தவறு என்று ராம மோகன ராவ் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராம மோகன ராவ், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட போது, ஒரு சில அமைச்சர்கள் அங்குதான் இருந்தார்கள் என்று விசாரணை ஆணையத்தில் நான் கூறியிருப்பதாக வெளியான தகவல்கள் தவறானது. நான் கூறியதாகச் சொல்லி தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்றைய தினம், மாலை 6 மணிக்கு மேல் தான் நான் அங்கு வந்தேன். அப்போது தலைமைச் செயலராக இருந்ததால் ஏராளமான பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதனால் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. மாரடைப்பு ஏற்பட்டபோது யார் யார் அங்கிருந்தார்கள் என்பதை நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏற்றம் கண்ட மின்சார வாகனப் பங்குகள்!

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!

மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!

நாதகவை 'மற்றும் பலர்' என விமர்சித்த விஜய்: சீமானுடனான சந்திப்பு குறித்து சேரன் கருத்து!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

