இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம்: அதிகாரி இன்று விசாரணை தொடக்கம்

அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம் தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைத்துள்ள விசாரணை அதிகாரி தனது கள ஆய்வினை வியாழக்கிழமை (19) தொடங்குகிறார்.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:42 am IST

அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம் தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைத்துள்ள விசாரணை அதிகாரி தனது கள ஆய்வினை வியாழக்கிழமை (19) தொடங்குகிறார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள பேராசிரியை நிர்மலா தேவியிடமும் அவர் விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக செல்லிடப்பேசி உரையாடல் வெளியானது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணை ஆணையத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைத்துள்ளார்.
இன்று தொடக்கம்: விசாரணை அதிகாரி ஆர்.சந்தானம், தனது விசாரணையை வியாழக்கிழமை (ஏப்ரல் 19) தொடங்குகிறார். இதற்காக அவர் மதுரை செல்கிறார். அங்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தவுள்ளார்.
பிற்பகலில் அருப்புக்கோட்டை செல்கிறார். அங்கு பயணியர் மாளிகையில் தங்கும் அவர், வெள்ளிக்கிழமையன்று பேராசிரியை நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தவுள்ளார். செல்லிடப்பேசி உரையாடல் தொடர்பாக, தகவல் தெரிந்தவர்கள் நேரில் சந்தித்து விவரங்களை அளிக்கலாம் என விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
வரும் 30-க்குள் அறிக்கை: விசாரணை அதிகாரி சந்தானம் தனது அறிக்கையை வரும் 30-ஆம் தேதிக்குள்ளாக ஆளுநரிடம் அளிக்க வேண்டுமென ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தனது களஆய்வுப் பணிகளை முடித்து விட்டு ஒரு வாரத்துக்குள் அறிக்கையை அளிக்க முடிவு செய்திருப்பதாக அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.