

சென்னை: காவிரி விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
மே 3ம் தேதி காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிரி விவகாரம் குறித்து பேச பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டும் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.
எனவே, பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துமாறு ஆளுநரிடம் முதல்வரும், துணை முதல்வரும் கோரிக்கை வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.