பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: அறிக்கை அளிக்க சந்தானம் குழுவுக்கு மேலும் 2 வாரம் அவகாசம்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு, தனது அறிக்கையை அளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
Updated on
1 min read

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு, தனது அறிக்கையை அளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி தனது கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய செல்லிடப்பேசி உரையாடல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைத்திருந்தார்.
அதிகாரி சந்தானம் மதுரையில் முகாமிட்டு தொடர் விசாரணை மேற்கொண்டார். அருப்புக்கோட்டை கல்லூரி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். பேராசிரியை நிர்மலா தேவியிடமும் அவர் தீவிர விசாரணை மேற்கொண்டார். ஏப்ரல் 30 -ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை அளிக்க ஆளுநர் அவருக்கு கால அவகாசம் அளித்திருந்தார். இந்த நிலையில், சந்தானம் குழுவின் விசாரணை தொடர்வதால், இக்குழுவின் அறிக்கை அளிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com