சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு விரைவாக கலைந்து செல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். தற்பொழுது சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அத்துடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்து தங்களது தலைவருக்கு இறுதி அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர் அதேசமயம் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் மரணமடைந்துள்ளார். அத்துடன் எட்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு விரைவாக கலைந்து செல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொண்டர்கள் நடுவே உரையாற்றிய ஸ்டாலின் கூறியதாவது:
நமது தலைவரின் உடலை அடக்கம் செய்வதற்காக மெரினா கடற்கரையில் இடம் கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
தனது வாழ்நாளில் இட ஒதுக்கீடு கேட்டு போராடியவர், இறப்பிற்குப் பிறகும் இட ஒதுக்கீட்டிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதி அஞ்சலி செலுத்த அதிக அளவில் தொண்டர்கள் கூடியுள்ளதால் ஒரு சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு ராஜாஜி அரங்கின் சுவற்றை ஏறிக் குதிக்க வேண்டாம் என்று தொண்டர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு உடனே கலைந்து செல்லுங்கள்.அப்போதுதான் குறிப்பிட்ட நேரத்தில் இறுதி ஊர்வலத்தை துவக்க இயலும்.
ஒரு சகோதரனாக இதைநான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



