கேரளத்தில் பெய்து வரும் கனமழை, வெள்ளத்தின் காரணமாக அங்கு நீட் பயிற்சி மையங்களில் தங்கிப் படித்து வரும் தமிழக மாணவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரலாறு காணாத கடும் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு கேரள மாநிலமே உள்ளாக்கப்பட்டுள்ளது. திருச்சூரில் உள்ள நீட் பயிற்சி மையங்களின் விடுதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். கன மழையினால் ஏற்பட்ட நிலச் சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்களது பிள்ளைகளை அழைத்து வர பெற்றோரால் திருச்சூர் செல்ல முடியவில்லை. இதனால் பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மாணவர்களும் பெற்றோரிடம் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, திருச்சூரில் நீட் பயிற்சி மையங்களில் தங்கியுள்ள தமிழக மாணவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! இலங்கை அணி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)

யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார்! அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில்!

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK


