நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

அமித் ஷா வருகைக்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை: திருமாவளவன் 

சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரத் திட்டமிட்டதற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்..

News image
Updated On :27 ஆகஸ்ட் 2018, 1:00 pm IST

மதுரை: சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரத் திட்டமிட்டதற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 30-ஆம் தேதி சென்னையில்  நடைபெற உள்ளது. இதில் திமுகவின் அழைப்பை ஏற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வ்ருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை என்று பின்னர்  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரத் திட்டமிட்டதற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்த அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: 

பல்வேறு விஷங்களில் கருணாநிதி அவர்களின் பங்களிப்பினை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில்தான் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறிய விஷயத்துடன் அரசியலை முடிச்சுப் போட வேண்டிய அவசியம் இல்லை. 

மறைந்த கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வருகை தந்தார்கள். அதைப் போலத்தான் இதுவும். எனவே இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.