கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

எளிதில் தீப்பற்றும் பொருள்களை எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

ரயில் பயணத்தின்போது, சபரிமலை செல்லும் ஐயப்பபக்தர்கள் கற்பூரம் ஏற்றி சுவாமி கும்பிட வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On :26 டிசம்பர் 2018, 2:22 am IST


ரயில் பயணத்தின்போது, சபரிமலை செல்லும் ஐயப்பபக்தர்கள் கற்பூரம் ஏற்றி சுவாமி கும்பிட வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மீறி செயல்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 20-ஆம் தேதி ஹைதராபாதில் இருந்து கொல்லம் சென்ற சிறப்பு ரயிலில் ஐயப்ப பக்தர்கள் கோயம்புத்தூர் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, ஐயப்பனை துதித்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அப்போது திடீரென தீப்பிடித்து சில துணிகள் எரிந்தன. இதையடுத்து சக பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். 
ரயில்வே பாதுகாப்புப் படையினர், அங்கு வந்து, ஆய்வு செய்து ரயிலில் கற்பூரம் ஏற்றி தீப்பிடிக்க காரணமானவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு, ரயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயிலில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு, சமையல் எரிவாயு, அமிலம், பெட்ரோல், மண்ணெண்ணெய், கற்பூரம் ஆகியவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. 
மேலும், ரயில் பயணத்தின்போது, கற்பூரம் உள்பட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை ஏற்றக்கூடாது. இது ரயில்வே சட்டம் 1989 -இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறி செயல்பட்டால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும். 
எனவே, ரயில் பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். ரயில் பயணத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்து சென்றால், ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.