சென்னை: புத்தாண்டை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
புத்தாண்டையொட்டி, அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து அனைத்து மாவட்ட காவல்துறைக்கும், முன்னெச்சரிக்கையாக இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி இரவு வரை வாகன சோதனையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பேருந்து நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனையிட தனியாக போலீஸாரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







