வரும் தேர்தலில் திமுக விரட்டி அடிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் கட்டாயத்தின் பேரில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
கர்நாடகாவுக்கு மட்டும் காவிரி சொந்தம் இல்லை. தமிழகத்துக்கும் சொந்தம். கர்நாடக அணை தொடர்பாக நடைபெறும் அனைத்து பிரச்னைகளுக்கு திமுக மட்டுமே காரணம். 1999ல் பாஜகவோடு கூட்டணி வைக்காவிட்டால் திமுக காணாமல் போயிருக்கும்.
வரும் தேர்தலில் திமுக விரட்டி அடிக்கப்படும். ஸ்டாலின் கனவு காண்கிறார். அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக எதிர்ப்பு தெரிவித்தது திமுக. தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சி பாராட்டிற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










