ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஏடிஎம்களில் பணம் நிரப்பச் சென்ற வேன் விபத்தில் சிக்கி ரூ. 1.85 கோடி மாயமானதாக நாடகமாடிய வழக்கில் கைதான 4 பேரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க முதுகுளத்தூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. கடந்த 20 ஆம் தேதி சாயல்குடி அருகே ஏடிஎம்களில் பணம் நிரப்பக் கொண்டு சென்ற வேன் விபத்தில் சிக்கியதாகவும், அப்போது ரூ.1.85 கோடி மாயமானதாகவும் வேனில் சென்ற ஊழியர்கள் கூறினர்.
இதுதொடர்பாக கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் நடத்திய விசாரணையில், வேன் விபத்து நாடகம் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் அன்பு, குருபாண்டி, வீரபாண்டி, கபிலன் ஆகியோரை கடலாடி போலீஸார் கைது செய்தனர்.
மேலும் கைதானவர்களிடம் இருந்து ரூ.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 4 பேரும் செவ்வாய்க்கிழமை காலை முதுகுளத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் இருவரை கைது செய்ய, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







