கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக 72.26 லட்சம் பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் தங்களது பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மூன்று மாத கால இடைவெளியில் பதிவுகள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை 72 லட்சத்து 26 ஆயிரத்து 792 ஆக உள்ளது.
வயது வாரியாக விவரம்: பள்ளிப் படிப்பை முடித்த 18 வயதுக்குள்ளான மாணவர்கள் 19 லட்சத்து 80 ஆயிரத்து 734 பேரும், 18 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 14 லட்சத்து 49 ஆயிரத்து 613 பேரும், 24 வயது முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 84 ஆயிரத்து 780 பேரும், 36 வயது முதல் 56 வயதுள்ள முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 11 லட்சத்து 5 ஆயிரத்து 332 பேரும், 57 வயதுக்கு மேற்பட்டோர்களில் 6 ஆயிரத்து 333 பேரும் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக 72 லட்சத்து 26 ஆயிரத்து 792 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் ஆர்வம்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளும் ஆர்வத்துடன் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். கை, கால் குறைபாடுடையோர்களில் 99 ஆயிரத்து 111 பேரும், பார்வையற்றோரில் 15 ஆயிரத்து 330 பேரும், செவித்திறனற்ற-வாய் பேச முடியாதோரில் 13 ஆயிரத்து 745 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக, 1 லட்சத்து 28 ஆயிரத்து 186 மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!

சுமை தூக்கும் பொருளாக மாறிப்போன சக்கர நாற்காலிகள்: பக்தர்கள் வேதனை!

தர்மன் 5 ரூபாய் மருத்துவரின் கதை இல்லை: அஷ்வத் மாரிமுத்து

நீதிக் கதைகள்! வாழ்வின் பெரும் புயலில் நடந்த அதிசயம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


