சென்னை நகருக்கு அருகாமையில் பாலவாக்கத்தில் விஸ்ராந்தி ஆதரவற்ற, வயது முதிர்த்த பெண்கள் காப்பகத்தில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தை மாதம் என்றாலே விசேஷம். அதிலும் நேற்று தை மாத கடைசி வெள்ளிக் கிழமை என்பதால், ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு லலிதா சகஸ்ர பாராயணம் - தேவி துதிகள் போன்றவைகளை பாடி மன மகிழ்ச்சியும், அமைதியினையும் ஏற்படுத்தினர். காப்பகத்தில் இருக்கும் முதியோர் இதனைக் கேட்டு மன அமைதி அடைந்தனர்.
காப்பகத்திற்கு வேண்டிய உதவித் தொகையினையும் மகளிர் அமைப்பு அளித்தது. இந்நிகழ்ச்சியினை விஸ்ராந்தி ஆதரவற்ற, வயது முதிர்த்த பெண்கள் காப்பகத்துடன் இணைந்து கொட்டிவாக்கம் அப்பய்ய தீட்சதர் அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.