மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உடல் நலனைக் கண்காணிக்கும் மொபைல் கருவிக்கான வழிமுறைகள்: சென்னை ஐஐடி-யில் உருவாக்கம்

உடல் நலனைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் கைக் கடிகாரம் போன்ற "வின்சென்ஸ்' கருவிக்கான வழிமுறைகளை (அல்காரிதம்) சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:50 pm

DIN

உடல் நலனைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் கைக் கடிகாரம் போன்ற "வின்சென்ஸ்' கருவிக்கான வழிமுறைகளை (அல்காரிதம்) சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவியை ஒரு நோயாளியின் அல்லது ஒரு நபரின் கையில் கட்டிவிட்டால், அது அந்த நபரின் நாடித் துடிப்பு, உடலின் ஆக்ஸிஜன் அளவு, மூச்சுத் திறன், தோல் வெப்பநிலை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட விவரங்களை மிகத் துல்லியமாக பதிவு செய்யும். அதுமட்டுமின்றி தொற்றாத நோய்கள் கண்காணிப்பையும் இந்தக் கருவி மூலம் மேற்கொள்ள முடியும். மெட்லோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த வழிமுறைகளை சென்னை ஐஐடி பயன்பாட்டு இயந்திரவியல் துறைப் போராசிரியர் எம். மணிவண்ணன் தலைமையிலானக் குழு இதை உருவாக்கியுள்ளது. 
இதுகுறித்து பேராசிரியர் மணிவண்ணன் கூறுகையில், நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக, உடல் நலனைக் கண்காணிப்பது என்பது இன்றைய காலத்தில் எளிதாகி வருகிறது. வின்சென்ஸ் கருவி மிகத் துல்லியமாக விவரங்களைக் கொடுக்கும் வகையில் இந்த வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.