புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சியினரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:46 pm

DIN

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சியினரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பேருந்துக் கட்டணத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் திங்கள்கிழமை கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர், சட்டப் பேரவையை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். அவர்களை பாரிமுனையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். 
உடனே, அனைவரும் சாலையில் அமர்ந்து 
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்
காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜி.ராம
கிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.