பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தமிழகத்தின் புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான்: மதுரை உயர் நீதிமன்றக் கிளை 

தமிழகத்தின் புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான் என்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:37 pm IST

மதுரை: தமிழகத்தின் புராதன சின்னங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான் என்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் முக்கியமான அகழாய்வுப் பகுதிகளில் ஒன்றான ஆதிச்சநல்லூரில் நிறுத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளை மீண்டும் துவக்க வேண்டும் எனவும், ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வுகள் தொடர்பான விரிவான அறிக்கையினை வெளியிட வேண்டும் என்றும் கோரி, செய்துங்கநல்லூரைச் சேர்ந்த  எழுத்தாளர் காமராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கானது செவ்வாயன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்தின் புராதன சின்னங்கள் மற்றும் அதுதொடர்பான தொல்லியல் ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புகார் உண்மைதான். மத்திய அரசு மட்டுமல்ல; மாநில அரசுமே இதில் அக்கறை காட்டுவது இல்லை.  அத்துடன் தமிழகத்திற்கு உரிய கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவது பற்றியும் அரசுகள் கண்டுகொள்வதில்லை.

எனவே தற்பொழுது மத்திய தொல்லியல் துறையின் சார்பில் தமிழகத்தில் எத்தனை இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெறுகிறது என்பது தொடர்பான விபரங்களும், இதுவரை அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற இடங்கள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலை தொடர்பான விரிவான தகவல்களும் நாளை மறுநாள் (வியாழன்) அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.  

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்பொழுது மத்திய தொல்லியல் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடர்பான அறிக்கை தயார் நிலையிலிருப்பதாகவும், மேலதிகாரிகள் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் 2002-2005 ஆண்டில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான  அறிக்கைகளை வெளியிட இவ்வளவு தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.