சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா?: நீட் வழக்கில்   உயர் நீதிமன்ற   கிளை கேள்வி   

சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா என்று நீட் தேர்வு மதிப்பெண்கள் தொடாபான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:07 pm

DIN

மதுரை: சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா என்று நீட் தேர்வு மதிப்பெண்கள் தொடாபான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழ் வழி நீட் கேள்வித்தாளில் இருந்த  குழப்பங்கள் காரணமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு திங்ககளன்று  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீட் தேர்வினை நடத்தும் சிபிஎஸ்இக்கு நீதிபதிகள் சில  கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவையாவன:

பொதுவாக நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது?  நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது? . தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட ஆங்கில வார்த்தை  தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் போது, என்ன வார்த்தை என்று மாணவர்களுக்கு முன்னரே கற்று கொடுக்கபட்டுள்ளதா?

கல்வி என்பது அனைவருக்கு சமமாக இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-க்கு இணையாக, தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா? 

இவ்வாறு கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்ற கிளையானது அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி, வழக்கு விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.