நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வரும் 20-ம்தேதி ஆஜராகவிட்டால் பிடிவாரண்ட்: எஸ்.வி.சேகருக்கு கரூா் நீதிமன்றம் எச்சரிக்கை  

நடிகா் எஸ்வி.சேகா் வரும் 20-ம்தேதி கரூா் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டால் அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என கரூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுப்பையா எச்சரிக்கை விடுத்துள்ளாா். 

News image
Updated On :5 ஜூலை 2018, 8:00 am

தினமணி செய்திச் சேவை

கரூா்: நடிகா் எஸ்வி.சேகா் வரும் 20-ம்தேதி கரூா் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டால் அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என கரூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுப்பையா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தி தனது முகநூலில் கருத்தினை பாகிர்ந்த நடிகா் எஸ்வி.சேகா் மீது நடவடிக்கை கோரி கரூரைச் சோ்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளரான தலித் பாண்டியன் என்பவா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்-2 ல் கடந்த ஏப்.25-ம்தேதி மனுத்தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. நடிகா் எஸ்வி.சேகா் தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா நடிகா் எஸ்வி.சேகா் வரும் 20-ம்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.