வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள்விழாவில், கன்னட மொழியில் எழுதப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூலை முன்னாள்

News image
Updated On :9 ஜூலை 2018, 7:58 pm

DIN

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள்விழாவில், கன்னட மொழியில் எழுதப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூலை முன்னாள் பிரதமர் எச்.டி. தேவெகெளடா வெளியிட்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள் விழா கர்நாடக மாநில அதிமுக சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு எம்ஜிஆர் மணி, ஏ.அருண், கே.ஏ.பழனி, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.ஏழுமலை வரவேற்றார். 
விழாவில் மனிதநேய அறக்கட்டளை நிறுவனரும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி பங்கேற்று, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, எம்ஜிஆரின் தத்துவப் பாடல்களின் கன்னட மொழி இசைத்தட்டு, கே.ஆர்.கிருஷ்ணராஜ் எழுதிய பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்று கன்னடநூல், புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைப்புரட்சி என்ற தலைப்பில் 5 மொழிகளில் எழுதப்பட்டுள்ள நூல் ஆகியவற்றை முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி. தேவெகெளடா வெளியிட்டார். இதன்பின்னர், போட்டியில் கலந்துகொண்ட 101 குழந்தைகளுக்கும் பரிசுகளை தேவெ கெளடா வழங்கினார்.
விழாவில் நடிகை செளகார் ஜானகி, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், எம்எல்ஏ உதய் கருடாச்சார், எம்எல்சி டி.ஏ.சரவணா, மதுரை முன்னாள் மேயர் எஸ்.நவநீதகிருஷ்ணன், எஸ்.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதைத் தொடர்ந்து, எம்ஜிஆர் வேடமணிந்தவர்களுக்கான மாறுவேடப்போட்டி நடைபெற்றது. நடுவர்களாக எம்ஜிஆரின் உடையலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து, எம்ஜிஆர் மன்ற நிர்வாகி துரைகருணா ஆகியோர் இருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.