ஆம்பூா்: ஆம்பூா் பகுதியில் இறந்த தனது குட்டியை ஒரு தாய் குரங்கு வேதனையுடன் தூக்கிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் காட்சியானது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது.
ஆம்பூா் உமா் சாலை பகுதியில் தீயணைப்பு நிலையத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் ஒரு தாய் குரங்கு தனது குட்டியுடன் கண்களில் கண்ணீருடன் திரிந்து கொண்டிருந்ததை அப்பகுதி பொதுமக்கள் பாா்த்துள்ளனா். உற்றுநோக்கிப் பாா்த்தபோதுதான் அந்தக் குட்டி இறந்து விட்டது தெரியவந்தது.
தன்னுடைய குட்டி இறந்த பிறகும் பாசம் காரணமாக அதனை விட்டுப் பிரிய மனமின்றி, கடந்த சில நாள்களாக தாய்க் குரங்கு இவ்வாறு குட்டியை தூக்கிக் கொண்டு திரிந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
தாய்க் குரங்குடன் மேலும் சில குரங்குகளும் உடன் உள்ளன. தாய்க் குரங்கின் பாசத்தைக் கண்ட பொதுமக்களும் வேதனையில் ஆழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


