இலங்கை முல்லைத்தீவு பகுதியில் கிணறு தோண்டியபோது ராக்கெட் குண்டுகள், கண்ணி வெடி உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கின. இதனை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி திங்கள்கிழமை விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இலங்கை முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் வெள்ளிக்கிழமை கிணறு தோண்டும் பணிக்காக சுத்தம் செய்தபோது அதில் சந்தேகத்துக்கு இடமான பொருள்கள் கிடந்துள்ளன. தகவலறிந்து அங்கு வந்த புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கிணற்றை ஆய்வு செய்தபோது சக்தி வாய்ந்த வெடி பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக நீதிமன்றம், கிணற்றை கடற்படை சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களின் மேற்பார்வையில் வெடி பொருள்களை எடுக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, வடக்கு பிராந்திய கடற்படை அதிகாரி விக்ரம் சிங்க தலைமையில் சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படையினர், வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் கிணற்றை தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் இருந்து ராக்கெட் குண்டுகள், கண்ணிவெடி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டன. திங்கள்கிழமை மாலை ஏராளமான வெடி பொருள்களை கடற்படையினர் கைப்பற்றினர். தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வெடி பொருள்கள் அனைத்தும் விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தியதாக இருக்கலாம் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









