தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்வு: தமிழக அரசு 

தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2018, 1:51 pm

DIN

சென்னை: தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் தங்களுக்கான ஊதியத்தினை உயர்த்தக் கோரி பெரிய அளவிலான போராட்டம் ஒன்றை சென்னையில் நடத்தினர்.

இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் ரூ.7000 தொகுப்பூதியம் பெற்று பணியாற்றி வரும் தற்காலிக செவிலியர்களின் ஊதியமானது தற்பொழுது ரூ.14000 ஆக உயர்த்தப்படுகிறது.

இந்த ஊதிய உயர்வானது ஏப்ரல் 1, 2018 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்

இதன் மூலம் தமிழக அரசில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 12000 செவிலியர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.