தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருநெல்வேலி மாவட்டத்தின் மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரவு நேரங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தொல்லை கொடுக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடாதவர்களை துன்புறுத்துகின்றனர். போராட்டத்தில் தொடர்பு இல்லாத 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தாருக்கு போலீஸார் தொல்லை கொடுக்க கூடாது என்று கூறி உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு மீதான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



