எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நீதிமன்றம் சொல்லாது..நாம்தான் செய்ய வேண்டும்: காவிரி விவகாரம் குறித்து கமல் 

காவிரி விவகாரத்தில் ஒற்றுமையாகச் செயல்படுவது குறித்து நீதிமன்றம் சொல்லாது; நாம்தான் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துளார்.

News image
Updated On :4 ஜூன் 2018, 1:01 pm

DIN

சென்னை: காவிரி விவகாரத்தில் ஒற்றுமையாகச் செயல்படுவது குறித்து நீதிமன்றம் சொல்லாது; நாம்தான் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துளார்.

காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சென்றார். இதையடுத்து திங்கள் காலை அவர் குமாராசாமியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேரில் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கமல், 'நான் மக்கள் பிரநிதியாக வந்துள்ளேன். நாங்கள் காவிரி உட்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம். குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது. அதனால் தண்ணீர் திறக்க நினைவூட்ட வந்துள்ளேன்' என்று தெரிவித்தார்.   

கர்நாடகப் பயணம் முடிந்து திங்கள் மாலை சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

காவிரி விவகாரத்தில் ஒற்றுமையாகச் செயல்படுவது குறித்து நீதிமன்றம் சொல்லாது; நாம்தான் செய்ய வேண்டும். நெடுங்கால சட்டப்போராட்டத்திற்கு தற்பொழுது தீர்ப்பு வந்துள்ளது. அதை சரியாக செயல்படுத்த வேண்டும். அதற்கான சமிக்கைகள் அங்கு தெரிகின்றது. நாம் அதனை எதிரொலிக்க வேண்டும்.

இது நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு பிரச்னை. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இது இருந்து வருகிறது.

காவிரி விவகாரத்தில் காலா ஏன் தொடர்பு படுத்தப் படுகின்றது என்றால் கலை எப்பொழுதும் அவர்களுக்கு 'ஈஸி டார்கெட்' .ஆனால் காலா இதனை முறியடித்து நல்ல வருவாய் ஈட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

நீட் முடிவுகளைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறந்து விளங்க வேண்டுமென்பதே எனது ஆசை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.