மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களை, அது தொடர்பான வழக்கில் சேர்க்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அடுத்த தினமே பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அரசு சார்பில் அமைச்சர்கள் 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பிறகு நேரில் சென்று ஆறுதல் அளித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. மேலும் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகியோர் விசாரணை நடத்துவதற்காக தூத்துக்குடிக்கு வந்துள்ளனர்.
முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், மற்றும் டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட இரு துணை வட்டாட்சியர்களையம், அது தொடர்பான வழக்கில் சேர்க்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று நடந்த குறிப்பிட்ட குறிப்பிட்ட அந்த வழக்கு விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர் மனுதாரர்களாக வட்டாட்சியர்களை சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!

ஹரி இயக்கத்தில் அதர்வா?

பஞ்சாப் கிங்ஸைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மமதா: அஸ்ஸாம் முதல்வர்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


