நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

'துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஜூன் 30 வரை பிரமாண வாக்குமூலம் அளிக்கலாம்'

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இம்மாதம் 30 -ஆம் தேதிவரை பொதுமக்கள் உள்ளிட்டோர் பிரமாண வாக்குமூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜூன் 2018, 2:33 am IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இம்மாதம் 30 -ஆம் தேதிவரை பொதுமக்கள் உள்ளிட்டோர் பிரமாண வாக்குமூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்தச் சம்பவம் தொடர்பான ஒருநபர் விசாரணை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடியில் கடந்த 22 -ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் போராட்ட சம்பவங்கள் குறித்து மனுக்கள், பிரமாண வாக்குமூலத்தை இம்மாதம் 30 -ஆம் தேதிவரை அளிக்கலாம்.
தூத்துக்குடி தெற்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விசாரணை ஆணைய முகாம் அலுவலகம், சென்னை பி.எஸ். குமாரசாமி ராஜா சாலையில் உள்ள ஒரு நபர் விசாரணை ஆணைய அலுவலகத்தில் பிரமாண வாக்குமூலம் அளிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, 044 - 2495 8185, 0461 - 2321729 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
விசாரணை ஆணையத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள், பிரமாண வாக்குமூலம் தொடர்பாக, குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்டோரிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விசாரணை செய்து தகவல் பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.