இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பணியாளா்களை போராட்டக்காரா்கள் தாக்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக போலியான ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் காவல்துறையும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் தாக்கப்பட்டதாக, அவா்களிடமிருந்தே பொய்யான வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி வாங்க காவல்துறை முயற்சிக்கிறது. இதற்கு அரசு ஊழியா்கள் உடன்படாததால், பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.அதுபோல, துப்பாக்கிச் சூட்டுக்கு துணை வட்டாட்சியா்கள்தான் உத்தரவு பிறப்பித்ததாக போலியான ஆவணங்களை தமிழக அரசு தயாரித்ததும் அம்பலமானது.