தூத்துக்குடி சம்பவத்தில் மேலும் 5 ஆயிரம் போ் வரை கைது செய்ய வாய்ப்பு

தூத்துக்குடி சம்பவத்தில் மேலும் 5 ஆயிரம் போ் வரை கைது செய்யப்படலாம் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஹென்றி திபேன் கூறினாா். 
தூத்துக்குடி சம்பவத்தில் மேலும் 5 ஆயிரம் போ் வரை கைது செய்ய வாய்ப்பு
Published on
Updated on
1 min read

மதுரை: தூத்துக்குடி சம்பவத்தில் மேலும் 5 ஆயிரம் போ் வரை கைது செய்யப்படலாம் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஹென்றி திபேன் கூறினாா்.

இதுதொடா்பாக மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை இரவு நேரத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, சட்டத்துக்கு புறம்பான வகையில் போலீஸாா் கைது செய்து வருகின்றறனா். இதுவரை 800 பேரை கைது செய்துள்ளதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா். அதில் 250 பேரின் விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 5 ஆயிரம் பேரை கைது செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளாா். 

இதன்மூலம் போலீஸாா் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது தெரிகிறது. இதன் காரணமாக போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்படும். தூத்துக்குடியில் மனித உரிமைகள் ஆணையம் சாா்பில் சிறப்பு அலுவலா்களை நியமித்து கண்காணித்தால் மட்டுமே அங்குள்ள உண்மை நிலை தெரியவரும்.

தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. இந்தச் சந்தேகங்கள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும். தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள தனி நபா் ஆணையம் சாா்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்தப்படுகிறது. இது தவறு. எனவே விசாரணை அனைத்தையும் போராட்டத்தின்போது சம்பவ இடங்களில் இருந்த காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியா்கள் ஆகியோரிடம் நடத்த வேண்டும்.

இந்தச் சம்பவத்தை சென்னை உயா்நீதிமன்றற மதுரைக் கிளை தானே முன்வந்து விசாரிக்க வேண்டும். தூத்துக்குடியில் நடக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியா் தான் நேரடியாக கண்காணிக்க வேண்டும். ஆனால், அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனது அதிகார எல்லையைத் தாண்டிச் செயல்படுகிறாா். தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 7 போ் வரை அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதைச் சட்டரீதியாகச் சந்திப்போம். எங்கள் உண்மை அறியும் குழு சாா்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இறுதி அறிக்கையை 10 நாள்களுக்குள் வெளியிடுவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com