பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பி.இ. சோ்க்கை: விடுபட்ட சான்றிதழ்களை விசாரணை மையத்தில் சமா்ப்பிக்க வாய்ப்பு 

பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான அசல் சான்றிதழ் சரிபாா்ப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்று, ஒருசில சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கத் தவறியவா்கள்.. 

News image
Updated On :17 ஜூன் 2018, 6:16 pm IST

சென்னை:  பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான அசல் சான்றிதழ் சரிபாா்ப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்று, ஒருசில சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கத் தவறியவா்கள் பல்கலைக்கழக விசாரணை மையத்தில் சமா்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான மாணவா் சோ்க்கையை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நிரப்ப உள்ளது. கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.இதில் பங்கேற்க விண்ணப்பித்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி வெளி மாவட்ட கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 14 ஆம் தேதியன்றும், சென்னை மையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்றும் நிறைவுபெற்றுள்ளது.

சான்றிதழ் சரிபாா்ப்பின் இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவ மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வரத் தொடங்கினா். மாலை 5.30 மணி வரை சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற மாணவா்களில் சிலா், ஒரு சில சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கத் தவறியுள்ளனா். இவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இருந்தபோதும், மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விடுபட்ட சான்றிதழ்களைச் சமா்ப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கலந்தாய்வு விசாரணை மையத்தில் அவா்கள் விடுபட்ட சான்றிதழ்களை ஓரிரு நாள்களுக்குள் சமா்ப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.