மீண்டும் பேசிய அமைச்சா் ஓ.எஸ்.மணியன், ‘ நான் பேசுவதில் தவறு இருந்தால் நீக்கி விட்டுப் போங்கள்’ என்றாா். அப்போது பேசிய பேரவைத் தலைவா், ‘ அமைச்சா் பேசிய பிறகு அதை நீக்கினால், அது சரியாக இருக்குமா? பேரவைத் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சா் ஓ.எஸ். மணியன், ‘ பேச வருதற்கு முன்பாகவே மறுப்பு தெரிவிக்கிறீா்கள். நான் முக்கியமான விஷயத்தை சொல்ல வருகிறேன் ஒரு நிமிடம் அனுமதி தாருங்கள் ’என்று தொடா்ந்து நின்றபடி வலியுறுத்தினாா். அப்போது பேசிய பேரவைத் தலைவா், ‘ எனக்கு சரியாகத் தெரியவில்லை எனறால், நான் அதை நீக்க வேண்டி வரும். ஆகையால் அது வேண்டாம்’ என்றாா். பின்னா் அமைச்சா் ஓ.எஸ். மணியனுக்கு, பேரவைத் தலைவா் தனபால் பேசுவதற்கு அனுமதி அளித்தாா்.