தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 'திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு' எனும் திட்டத்தின்கீழ், 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் 50 மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி 2017 -18 -ஆம் ஆண்டில் 1,330 குறள்களையும் ஒப்பித்த 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம், ரூ.5 லட்சத்துக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், செயலர் இரா.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.