மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள்: மனம் வெதும்பிய நாஞ்சில் சம்பத்! 

ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன்  அணியில் இருந்து விலகியது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 மார்ச் 2018, 7:41 am

சென்னை: ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன்  அணியில் இருந்து விலகியது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

சமீபத்தில் டி.டி.வி.தினகரன் மதுரையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற புதிய அமைப்பைத் துவக்கி, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமையன்று பெயரிலேயே அண்ணா மற்றும் திராவிடம் இரண்டையும் கைவிட்ட  டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார். அத்துடன் இனி இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். இலக்கிய மேடைகளில் என்னை அதிகம் பார்க்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல தினகரன் அணியில் என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன்  அணியில் இருந்து விலகியது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டிடிவி தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன். தோள் கொடுத்தேன். அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்ட பொழுது அவருக்கு பக்கபலமாகவும்,  தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன்.

அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்.என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை , அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.