மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

முதலில் நியமனம்...பிறகு நீக்கம்; ஆதரவாளர்கள் ராஜிநாமா: களைகட்டும் ரஜினி மன்றம்! 

விரைவில் துவங்கவுள்ள ரஜினி கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான நிர்வாகிகள் 147 பேர் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். 

News image
Updated On :23 மார்ச் 2018, 6:59 pm IST

சென்னை: விரைவில் துவங்கவுள்ள ரஜினி கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான நிர்வாகிகள் 147 பேர் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். 

விரைவில் துவங்கவுள்ள ரஜினி கட்சியின் ஆரம்ப கட்டமாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகளை நியமனம் செய்வதில் செயலாளர் ராஜு மகாலிங்கமும், நிர்வாகி வி.எம்.சுதாகரும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 27–ந்தேதி சென்னையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 15–ந்தேதி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமன பட்டியல் வெளியானது. அதில் மாவட்ட பொறுப்பாளராக அரவிந்தும், செயலாளராக தம்புராஜூம் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பட்டியல் வெளியான 7 நாட்களிலேயே மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கபட்டுள்ளார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் முரணாக செயல்பட்டு கொண்டிருப்பதினால் அவர் ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக தகுதிநீக்கம் செய்யப்படுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆர். அரவிந்த், மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 147 பேர் தங்களுடைய பொறுப்பை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.