மாற்றாராய் நின்று தம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை' என்னார், அறிவுடையோர்;-ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால், தாமவரைப்
போர்த்தின்னா செய்யாமை நன்று.
(பாடல் 67 அதிகாரம்: சினம் இன்மை)
தமக்குப் பகைவர்களாக எதிர் நின்று, தம் பகைமைக்கு ஏற்ற செயல்களையே செய்து கொண்டிருப்பவருக்கு எதிராகத் தாமும் அப்படிச் செய்யாமையினை, ஆற்றலில்லாமை என்று அறிவுடையோர் கருதவே மாட்டார்கள். ஆதலால், அப்படிப் பகைவர்களும் பொறுமையின்றி எதிர்த்துக் கொடுமையான செயல்களைச் செய்த காலத்தும் தாங்கள் அவர்களுக்கு மீட்டும் அப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்யாமலிருப்பதே நன்மை தரும் பண்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








