மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரூ.5 லட்சம் லஞ்சம்: சென்னை பொது கணக்காளர் சிபிஐ அதிகாரிகளால் கைது

ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :23 மார்ச் 2018, 1:57 pm

ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் காலை 10 மணி முதல் சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இங்குள்ள பொது கணக்காளர்கள் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் மேலும் இரண்டு பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.