சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று அ.ம.மு.க அமைப்பின் நிறுவனர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க அமைப்பின் நிறுவனர் டிடிவி தினகரன் சென்னையில் வெள்ளியன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
மத்திய அரசு மீது கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க தயார் என தம்பிதுரை கூறுவது ஏமாற்று வேலை. தற்பொழுது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை. எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவர்.
இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.பி.சௌத்ரி மறைவு: கமல்ஹாசன் இரங்கல்
தோற்றாலும் தோல்வியில்லை! வெற்றி நிச்சயம்! மாணிக்கம் தாகூரின் பதிவு வைரல்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம்!

இன்றைய ராசி பலன்கள் (06 மே 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


