சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

உயர்ந்த குறிக்கோளை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு கவிஞர் வைரமுத்து அறிவுரை

மாணவர்கள் உயர்ந்த குறிக்கோளை வாழ்வின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அறிவுறுத்தினார்.

News image

மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்லூரி தின விழாவில், சிறந்த கல்விச் சாதனை விருதை தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் டி.ஷீலாவிடம் வழங்குகிறார் கவிஞர் வைரமுத்து

Updated On :29 மார்ச் 2018, 9:02 pm

மாணவர்கள் உயர்ந்த குறிக்கோளை வாழ்வின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அறிவுறுத்தினார்.
மேற்கு தாம்பரம், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்லூரி தின விழாவில் அவர் பேசியது:
இன்றைய இளம் மாணவர்கள் அறிவாற்றல் மிகுந்தவர்களாகத் திகழ்கிறார்கள். நாங்கள் 40 வயதில் பெற்ற அறிவை இன்றைய மாணவர்கள் 20 வயதில் பெறுகிறார்கள். விஞ்ஞான வளர்ச்சி உலகை உள்ளங்கைக்குள் அடக்கும் ஆற்றலை உங்களுக்குத் தந்துள்ளது. அறிவைப் பெறும் அவசரத்தில் வழிவழியாகக் கடைப்பிடித்து வந்த பண்பாட்டைத் தொலைத்து விடக் கூடாது. அறிவு கூர்மையாக இருக்கும்போது பண்பாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் எவ்வளவு கூர்மையானவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுவோராகவும் உள்ளனர். 
பத்திரிகை, தொலைக்காட்சியில் வரும் மாணவ, மாணவியரின் தற்கொலை செய்திகள் என்னை துடிதுடிக்கச் செய்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும் தவறான முடிவைத் தேடுவது ஒட்டுமொத்த மனித வளத்துக்கும் இழுக்கு என்றார் வைரமுத்து. 
இதைத்தொடர்ந்து, சாய்ராம் கல்விக் குழுமம் சார்பில் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை கல்வி அறக்கட்டளை தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் ஆகியோர் வைரமுத்துவிடம் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.