காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக காவிரி மேலாண்மை விவகாரத்தில் தற்கொலை செய்யயும் தயார் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


