சென்னை: சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விருகம்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட காவலாளி சபீல் லால் நேபாளத்தில் சர்வதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஐஓபி வங்கியில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறையைப் பயன்படுத்தி, அதே வங்கியில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த சபீல் லால் சந்த் என்பவர் வங்கி லாக்கரை உடைத்து ரூ. 32 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் நகைகளுடன் மாயமானார்.
பின்னர் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் கொள்ளையில் காவலாளி சபில் லால் சந்த் மற்றும் அவரது மகன் திலூ ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரும் சொந்த ஊரான நேபாளம் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் போலீஸார் நேபாளத்திற்குச் சென்றனர். அதேசமயம் சர்வதேச காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதேசமயம் சென்னையில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த வங்கிக் கொள்ளையில் கார் ஓட்டுநர் ரமேஷ் என்பவர் உட்பட 6 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.
தற்பொழுது சர்வதேச காவல்துறையினர் மூலம் சபீல் லால் சந்த் சிக்கியுள்ளார். மற்ற நான்கு பேர் சிக்கவில்லை. கைது செய்யப்பட்ட அவர் விரைவில் சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!

ஜன நாயகன் விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்!

லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி: உதயநிதி ஸ்டாலின்
முன்னோடித் திட்டங்களில் திமுகதான் ‘ஓஜி!' - முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


