ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

சட்டப் பல்கலைக்கழகம்: புதிய பதிவாளர் பொறுப்பேற்பு

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொறுப்பு) டி.சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.

Updated On :29 மார்ச் 2018, 9:02 pm

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொறுப்பு) டி.சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.
பதிவாளராகப் பொறுப்பேற்றுள்ள சங்கர், குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத் துறையின் தலைவராக ஏற்கெனவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அண்மையில் பொறுப்பேற்ற டி.எஸ்.என்.சாஸ்திரி, புதிய பதிவாளர் (பொறுப்பு) நியமன உத்தரவைப் பிறப்பித்தார்.
நான்கு பேர் விடுவிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கே.எஸ்.சர்வானி, வி.பாலாஜி, எஸ்.கே.அசோக்குமார், டி.ஜெய்சங்கர் ஆகியோர் அவர்கள் வகித்து வந்த அனைத்து நிர்வாகப் பதவிகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.