குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

என்னை அறியாமல் அஜித் பிறந்தநாள் வாழ்த்து பதிவு: அமைச்சர் செங்கோட்டையன்

நடிகர் அஜித்-க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விட்டனர் என அமைச்சர் செங்கோட்டையன்விளக்கமளித்துள்ளார். 

News image
Updated On :1 மே 2018, 10:31 am IST

நடிகர் அஜித்-க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விட்டனர் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 

நடிகர் அஜித் 1971-ஆம் வருடம் மே 1-ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அஜித் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

திரைப்படம் மட்டுமின்றி கார் மற்றும் பைக் பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஃபார்முலா 3 கார் பந்தயத்தில் பங்கேற்றவர். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 2012-ஆம் ஆண்டு 61-ஆவது இடத்தைப் பெற்றார். பின்னர் 2014-ஆம் ஆண்டில் 51-ஆவது இடம்பிடித்தார். அதுபோல 2013-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகராகவும் உள்ளார். 

நடிகை ஷாலினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என்று 2 குழந்தைகள் உள்ளனர். இன்று இவர் பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல தரப்பிலும் அஜித்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Story image

இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு அமைச்சர் செங்கோட்டையனின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே தன்னை அறியாமல் அது பதிவிடப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.