விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரதமரை தனித்துச் சென்று சந்திப்பது சரியாக இருக்காது: தில்லியில் முதல்வர் பழனிசாமி பேட்டி 

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை தனித்துச் சென்று சந்திப்பது சரியாக இருக்காது என்று தில்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 மே 2018, 3:28 pm

புதுதில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை தனித்துச் சென்று சந்திப்பது சரியாக இருக்காது என்று தில்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தில்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவினை எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றிய  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். ஆலோசனைக்குப்  பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

முன்னரே உங்களிடம் தெரிவித்திருந்தவாறு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவினை எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றிய  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இங்கு வந்திருந்தேன்.

அதுதொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றது. அப்பொழுது திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை கழகத்தை ரூ 500 கோடி செலவில் தரம் உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அத்துடன் காந்தி ஜெயந்தியன்று இலவச வேட்டி, சேலை வழங்க தனியாக கோரிக்கை வைத்துள்ளோம்.

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேச தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்.ஆனால் கோரிக்கை மனுவுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை பதில் வரவில்லை. நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு பிரதமர் வந்தபோதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.

முன்னரே அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி காவிரி விவகாரத்தில், நான் பிரதமரை தனியாக சந்திப்பது நன்றாக இருக்காது. கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடன் சந்திப்பதே முறையாகும்.

காவிரி நீரை  விவசாயிகளுக்கு பெற்றுத்தர தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.