வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குட்கா வழக்கு: திமுக எம்.எல்.ஏ.வுக்கு நிபந்தனை ஜாமீன்

குட்கா வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சூலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. 

Updated On :14 மே 2018, 8:18 pm

குட்கா வழக்கில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு சூலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. 
கோவை மாவட்டம், சூலூர் அருகே, கண்ணம்பாளையத்தில் போலி குட்கா ஆலையை காவல் துறையினர் ஏப்ரல் 27-ஆம் தேதி கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, ஆலையில் வெளிப்படையான சோதனை நடத்த வேண்டும் என கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக திமுகவினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கோவை சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், சோமனூரைச் சேர்ந்த தங்கராசு உள்ளிட்டோர் தலைமைறைவாகினர். 
இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த இருவரும் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினர். அவர்களை விசாரித்த நீதிபதி வேடியப்பன், மறு உத்தரவு வரும் வரை இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, சூலூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு இருவரும் கையெழுத்து இட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.