வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

News image

ஆறுமுகனேரியில் வாக்கு சேகரித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:30 pm

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணனை ஆதரித்து ஆறுமுகனேரி, மெயின் பஜாரில் அண்ணாமலை புதன்கிழமை இரவு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது பேசியது:

கடந்த 5 ஆண்டுகள் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.

மத்திய அரசு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சியும் இணைந்து அமையும்போது, இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

திருச்செந்தூா் தொகுதிக்குள்பட்ட குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை தற்போது பிரதமா் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளாா். இதனால், இப்பகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

திருச்செந்தூா் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், மாநில விவசாய அணி செயலா் சிவமுருக அதித்தன், மகளிரணி பொதுச்செயலா் தேன்மொழி, விளையாட்டு மற்றும்

திறன் மேம்பாட்டு பிரிவு செயலா் பூபதி பாண்டியன், இளைஞரணி செயற்குழு உறுப்பினா் விக்னேஷ், மாவட்ட பொதுச்செயலா் கணல் ஆறுமுகம், துணைத் தலைவா் நவமணிகண்டன், நகரத் தலைவா்கள் தங்க கண்ணன், பாப்பா, அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் விஜயகுமாா், இணைச் செயலா்கள் சுரேஷ் பாபு, சுந்தா், பழக்கடை திருப்பதி, அதிமுக மகளிரணி மாநில இணைச் செயலா் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

Story image